சிந்தையில் தோன்றும் சிற்சில வரிகளை,

செம்மையாய் சேர்த்தெடுத்து சிறியதாய் தொகுத்துள்ளேன்!

பிடித்திருந்தால் படியுங்கள், பிறருக்கும் சொல்லுங்கள்!

கருத்துக்கள் தருவதானால் கைகுலுக்கி வரவேற்ப்பேன்!

Thursday, March 21, 2013

காரணமில்லா காதல்

காரணங்களைக் கடந்த கவர்ச்சி தான் காதல்
கண்டதும் கொண்டிடும் காதலே சாட்சி!

Friday, June 1, 2012

மாற்றம்

சலசலப்பை சந்கீதமாக்கும் அவள் சலங்கை!
சுவாசத்தை ஸ்வாரஸ்யமாக்கும் அவள் ஸ்பரிசம்!

Friday, May 11, 2012

நான் + நீ = நாம்




நானென்றால் நானல்ல நீயென்று நீ சொன்னாய்!
நீயென்றால் உன்னோடு நானென்று நீ சொன்னாய்!
நான் நீயாய், நீ நானாய், நாமென்றால் யாதென்றேன்.
நான் உனக்கும், நீ எனக்கும் நாமென்று நீ சொன்னாய்!

Monday, April 23, 2012

நிஜம்


நிலவில்லா வான்
சுவையில்லா தேன்
செவிளில்லா மீன்
நீயில்லா நான்!

Monday, April 2, 2012

facebook & google

தோழன் ஒருவன் துணை இருந்தால்,
      google தேவையில்லை!

தோழி ஒருத்தி உடன் இருந்தால்,
      facebook தேவையில்லை!

Thursday, March 29, 2012

வாழ்க்கையில்

நினைவுகளை சேமிக்கிறேன்,
  கனவுகளில் செலவழிக்க!
 

Tuesday, March 27, 2012

உன் மருதாணிக் கை விரலில்

உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.