Thursday, September 30, 2010

என்னைக் காணவில்லை

கண்களில் நீ
கருத்தினில் நீ
சிந்தையில் நீ
சிரிப்பினில் நீ
சொந்தமும் நீ
சொர்க்கமும் நீ

சொல்லடி பெண்ணே,
நான் இங்கு எங்கே?

Wednesday, September 29, 2010

திட்டமிடும் விழிக்கணைகள்

காவியமோ, ஓவியமோ,
கண்ணகியின் கார்ச்சிலம்போ,
பாற்குடமோ, போர்க்கலமோ,
பேரழகுப் பெட்டகமோ?
வட்டமிடும் விழிக்கணைகள்
திட்டமிட்டுக் கொல்லுதடி!

Tuesday, September 28, 2010

உன் சிரிப்பினில்

நெருப்பு மட்டுமல்ல,
சிரிப்பும் சுடுமென உணர்ந்தேன்.
பேய்ப்பெண்ணே, நீ என்னைப் பிரிந்தபின்!

உம்

'உம்'மென்று சொல்லடி.
உள்நெஞ்சை உதறிக் கொடுத்துவிட்டு,
உயிர் மாய்த்துக்கொள்வேன் நான்! 

Saturday, September 25, 2010

உயிரோடு உயிராக

உயிர் போகும் தருணத்தில்
உன்னோடு நானிருந்தால்
விண்ணோடு செல்லாமல்
உன் விழியோடு உறைந்திடுவேன்!

சர்க்கரைப் பெண்

சர்க்கரைப் பெண்ணே,

உன்மீது எறும்புகள் மொய்க்காததும்
அதிசயம்தான் !