Tuesday, February 8, 2011

பொய்யாகிப் போனேன் நான்

நிலை குலைந்த நிலையினிலும்
நினைவை ஈர்த்திழுக்கும்
நிஜம் நீ பெண்ணே!
பொய்யாகிப் போனேன் நான்!

பைத்தியமாய் திரிகின்றேன்

மந்திரப் புன்னகையால்
மனதை மதிமயக்கும்
மாயமென்ன செய்தாய் பெண்ணே?
மாறுதல்கள் நான் கண்டேன்.
மழைத்துளியை முத்தமிட்டேன்.
நள்ளிரவில் பகல் கண்டேன்.
பகல் பொழுதில் பரவசித்தேன்.
பைத்தியமாய் சிரித்திருந்தேன் நீ இருந்த அப்போது.
பைத்தியமாய் திரிகின்றேன் நீ பிரிந்த இப்போது.