Wednesday, April 20, 2011

?

பளிச்சென்று ஒரு வெளிச்சம்.
மின்னலென நான் நினைதேன்,
அது அவள் கண்கள்.

சில்லென ஒரு குளிர்ச்சி.
தென்றலென நினைதேன்,
அது அவள் வாசம்.

திக்கெட்டும் தெறிக்கும் தித்திக்கும் தேன்துளிகள்.
சாரல் மழையென நினைதேன்,
அவை அவள் கொஞ்சும் மொழிச் சொற்கள்.

சிந்தை பறிபோன சிற்சில நிமிடங்கள்.
காதலென நினைதேன்.
அது ________________

கண்மணியே




என் இடக்கண்ணைத் தா என்றாய்.
எடுத்துக்கொள் எனத் தந்தேன்.


வலக்கண்ணும் வேண்டுமென்றாய்.
வாங்கிக்கொள் எனத் தந்தேன்.


இன்னொரு கண் வேண்டுமென்றாய்.
என் செய்வேன் என்னுயிரே!



 

Tuesday, April 5, 2011

நிலவு

நிலவுக்கு கண்ணும் மூக்கும் 
இதழோடு சேர்ந்திருந்தால் 
நிஜமாகச் சொல்வேன் பெண்ணே 
நீயென்று நினைத்திருப்பேன்!