Saturday, September 24, 2011

நீ பிரிந்தால்,

எனை நீங்கி உன்னோடு செல்பவைகள் சிலவற்றை,
சிந்தித்து சொல்கின்றேன் சிலநொடிகள் கேட்டுச்செல்.

தெளிவான இசை ஆர்வம், தித்திக்கும் சுவை நாட்டம்,
கனிவான சொல்லாண்மை, செல்வழியில் தவறாமை,

இவையோடு என்மனதின் இனிதான நினைவுகளும்,
அவையோடு துணையாக கனவுகளும் கற்பனையும்,

நிறையோடு முகம்சூழ்ந்த நகைச்சுவையும் புன்னகையும்,
தனியான என்னுடலில் தவித்தாடும் உயிருணர்வும் !!