Friday, November 18, 2011

திருமணம்



நான் வந்து உன்னோடு நீயாகும் அந்நாளில்,
நீ வந்து என்னோடு நாமாவோம், அதன் பின்னே,
நீயென்றும் நானென்றும் ஏதங்கே? மேகத்தின்
காற்றோடு நீராக நாம் சேர்வோம்.

Friday, November 4, 2011

கற்பனைக் காதல்

கற்பனையில் கண்பார்த்து, 
கற்பனையில் கதை பேசி, 
கற்பனையில் காதலித்தேன்!
அக் காதலிலும் தோல்வியுற்றேன்!


காதல் கற்பனைதான்.
காதல் தோல்வியும் கற்பனைதான்! 

கவியழகே,
(என்) கண்ணீர் மட்டும் நிஜம்.