Thursday, March 29, 2012

வாழ்க்கையில்

நினைவுகளை சேமிக்கிறேன்,
  கனவுகளில் செலவழிக்க!
 

Tuesday, March 27, 2012

உன் மருதாணிக் கை விரலில்

உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.


இடம் மாறிய இதயம்

இவள் வந்து
  என் நெஞ்சில்
இடம் பெயர்வால்
  என்றறிந்து, 
 
இடம்கொடுக்க
  இதயத்தை
இடப்பக்கம்
  நகர்த்திவைத்தான்!


[Knowing that, she will come and migrate/shift to my chest
to giver her some place. Nature had moved my heart a little left.]

Friday, March 23, 2012

காகித மலர்கள்

அவள் கண்களிரண்டும்
    காகித மலர்கள்!
காய்ந்து கிடந்தாலும்,
     வாடி இருப்பதில்லை!


[காய்ந்து கிடந்தாலும் - ஏங்கி நிற்கும் என் மீது இறக்கம் கொள்ளாமல்]

Wednesday, March 21, 2012

உன் பொங்கல் பறிபோனால்?

வேறொருவன் வேதனையில்
        வெண்பொங்கல் சமைதுண்டால்,
யார் வருவார் உன் பின்னே,
        உன் பொங்கல் பறிபோனால்?

என் தோழா, எழுந்து வா!

நல்லவராய் வாழ்தல் இழிவென்று  எண்ணும் 
நாகரீக இவ்வுலகில்,
வல்லவன் வகுக்கும் வக்கற்ற விதிகளெல்லாம்
வள்ளுவமாய் வாசலெங்கும்!

ஏனென்ற கேள்வி எவரிடமும் இங்கில்லை,
தானென்ற வாழ்க்கையிலே தலை மூழ்கிய தயாளர்கள்!

எலும்பிட்டால் வாலாட்டும் நாய்கட்கும் நம்மவர்க்கும்
ஏதிங்கே வித்யாசம், என் தோழா, எழுந்து வா!

Tuesday, March 13, 2012

கண்ணீர் - உதிரம்

கண்கள் வடித்த கண்ணீர்,
கரையின்றி காய்ந்துவிட்டது கண்ணத்தில்.
உள்ளம் உதிர்த்த உதிரம்,
குமுருதடி பெண்ணே,
கரையாக அல்ல, கடல் அலையாக!

Thursday, March 1, 2012

முத்த சத்தம்

முத்தத்தை வாங்கிக்கொண்டு,
சத்தத்தை மட்டும் கொணர்ந்தது
என் அலைபேசி.

முத்த சத்தத்தில்
ஓராயிரம் யுத்தங்கள்.

மொத்த முத்தத்தில், .........