Friday, December 11, 2015

பாரதி நின்புகழ்

அழகிய கவிதை.
ஆழ்ந்த கருத்து.
இனிய செந்தமிழ்.
ஈடிலா தோரனை.
உள்ளம் உரைக்க
ஊதிய சங்கம்(சங்கு)
எண்ணம் சிறந்து
ஏறுபோல் உழைத்திட
ஐயம் களைந்து
ஒற்றுமை நம்மிடை
ஓங்கிடத் தோன்றிய
பாரதி நின்புகழ்
வானிடை நீந்திடும்
செஞ்சுடர் வாடினும்
வாடாதிருந்து வாழ்ந்திட வாழ்த்துவோம்.