Monday, August 29, 2016

எண்திசைகள் ஒன்றாகிட

மெல்லிசையே எண்திசைகள் உன்னசைவில் ஒன்றாகிட
பெண்ணழகே உன்விழியில் என்மனதை நான் தொலைத்தேன்
முத்தமிழே மூச்சோடு உன்வாசம் நான் நுகர
சத்தமிலாதென் நெஞ்சில் யுத்தமொன்று மூளுதடி

Monday, August 22, 2016

வரம்


வானமழை உந்தன் மீதுவிழ எந்தன் தேகமெலாம் சிலிர்க்கும்


தேனொழுகும் உன் வாய்மொழிச் சொற்களில் தேகசுகம் பெருகும்


நானுனைக் கானிட நேரிடுமென்பது ஆண்டவன் அற்புதமோ - உயிர்


தானினி போயினும் போகட்டும் மேலொரு போகமும் ஈங்கு உண்டோ.