Kavithaigal
Pages
வாசல்
Travelogue - Munnar
Friday, May 11, 2012
நான் + நீ = நாம்
நானென்றால் நானல்ல நீயென்று நீ சொன்னாய்!
நீயென்றால் உன்னோடு நானென்று நீ சொன்னாய்!
நான் நீயாய், நீ நானாய், நாமென்றால் யாதென்றேன்.
நான் உனக்கும், நீ எனக்கும் நாமென்று நீ சொன்னாய்!
Monday, April 23, 2012
நிஜம்
நிலவில்லா வான்
சுவையில்லா தேன்
செவிளில்லா மீன்
நீயில்லா நான்!
Monday, April 2, 2012
facebook & google
தோழன் ஒருவன் துணை இருந்தால்,
google தேவையில்லை!
தோழி ஒருத்தி உடன் இருந்தால்,
facebook தேவையில்லை!
Thursday, March 29, 2012
வாழ்க்கையில்
நினைவுகளை சேமிக்கிறேன்,
கனவுகளில் செலவழிக்க!
Tuesday, March 27, 2012
உன் மருதாணிக் கை விரலில்
உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.
இடம் மாறிய இதயம்
இவள் வந்து
என் நெஞ்சில்
இடம் பெயர்வால்
என்றறிந்து,
இடம்கொடுக்க
இதயத்தை
இடப்பக்கம்
நகர்த்திவைத்தான்!
[Knowing that, she will come and migrate/shift to my chest
to giver her some place. Nature had moved my heart a little left.]
Friday, March 23, 2012
காகித மலர்கள்
அவள் கண்களிரண்டும்
காகித மலர்கள்!
காய்ந்து கிடந்தாலும்,
வாடி இருப்பதில்லை!
[காய்ந்து கிடந்தாலும் - ஏங்கி நிற்கும் என் மீது இறக்கம் கொள்ளாமல்]
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)