Wednesday, January 4, 2012

இமைகள்

பொதுவாய் கண் மூடும்போது மேல் இமை கீழிறங்கி கீழ் இமையை முத்தமிடும்!
உறங்கும்போது மட்டுமே, கீழ் இமை மேலே சென்று மேல் இமையை தழுவிக்கொள்ளும்!
அன்பே நான் உன்னைக் கண்டு மெய்மறக்கும் நொடிப் பொழுதில்,
இமையிரண்டும் இனைந்து வந்து இதமாக இனிய இசை பாடுதடி!

Tuesday, December 20, 2011

பொய்




குறிஞ்சியாய் பூத்த
       என் நெஞ்சத்து சோலையிலே
நெருஞ்சியாய் குத்துதடி
        நீ சொன்ன சிறு பொய்!

Friday, December 16, 2011

பொய்யாகும் உண்மைகள்

புவி ஈர்ப்பு விசை யாவும்
பொய்யாகிப் போனதடி!
பெண்ணே நான் உன் நினைவில்
பறக்கின்ற அந்த நொடி! 

Wednesday, December 14, 2011

மழை

கடுமழைக்கு பயந்து
கார்மேகக் கருங்குடையுள்
மறைந்தாயோ வெண்ணிலவே?

அந்நிலவைக் காண
வின் நீங்கிச் சென்றீரோ வின்மீங்காள்!

Friday, November 18, 2011

திருமணம்



நான் வந்து உன்னோடு நீயாகும் அந்நாளில்,
நீ வந்து என்னோடு நாமாவோம், அதன் பின்னே,
நீயென்றும் நானென்றும் ஏதங்கே? மேகத்தின்
காற்றோடு நீராக நாம் சேர்வோம்.

Friday, November 4, 2011

கற்பனைக் காதல்

கற்பனையில் கண்பார்த்து, 
கற்பனையில் கதை பேசி, 
கற்பனையில் காதலித்தேன்!
அக் காதலிலும் தோல்வியுற்றேன்!


காதல் கற்பனைதான்.
காதல் தோல்வியும் கற்பனைதான்! 

கவியழகே,
(என்) கண்ணீர் மட்டும் நிஜம்.

Monday, October 31, 2011

குவியம்

என் நினைவுகள் யாவும் ஓர் இடத்தினில் குவியுமாயின்,
அது உன்னிடம் மட்டுமே தோழி!