Thursday, November 18, 2010

என் காதலிக்கு கல்யாணம்

என் காதலிக்கு கல்யாணம், கண்ணாலன் நான் இல்லை.


நினைவுகளில் நீரலைகள், நித்திரையில் நெருப்பலைகள்.
கண்ணெதிரே பூக்கோலம், நெஞ்சருகே போர்க்காலம்.


என்
நெஞ்சகதுச் சோலையிலே பூத்தொளித்த மல்லிகைப்பூ,
பஞ்சகத்தை தேடியதும் பூஞ்சோலை வாடியது. 


உள்நெஞ்சம் கதறுதடி, உதிரமெல்லாம் கருகுதடி. 


உன் 
மணவறையில் அக்னிகுண்டம் அணையும் ஒரு தருணத்தில்,
பிணவறையில் என் உடம்பு கரியாகிக் கிடக்குமடி.




என் காதலிக்கு கல்யாணம்.




கண்ணாலன்.






நான் இல்லை.