Friday, December 24, 2010

சிந்தையை சிதைக்கும் காதல்

அன்றொருநாள் உன்னுடன் நான்
அனுபவித்த இன்பமெல்லாம்
கண்ணிரண்டில் கண்ணீராய்
கண்ணமெங்கும் பாயுதடி.

காதருகே கவின் மொழியாய்
நீ உரைத்த சொர்ற்க்கள் எல்லாம்
நெஞ்சகத்தின் சுவர்களிலே 
நித்தம் எதிரோலிக்குதடி.


நடுநிசியில் நரம்புகளின்
நடுவினிலே பிறக்குமொரு
நடுக்கத்தை நினைத்துருக 
புஜங்கள் பல வேண்டுமடி!


இன்னம் ஒரு நொடி கூட
உயிர் வாழத் தோன்றவில்லை.
இறந்தபின்னும் வலிதொடரும்
என்ற பயம் துரத்துதடி!

No comments:

Post a Comment