Wednesday, June 19, 2013

ஏழு நாள் குழந்தை

என் மகள் கண்களில் ஏழு நாள் குழந்தையாய்
      என்னை நான் பார்க்கிறேன்! என்னை நான் பார்க்கிறேன்!
ஒன்றென இருந்த எம் இருவருக் இடையிலே
      ஒன்றிட வந்தவள் உள்ளத்தால் பார்க்கிறேன்!
பிஞ்(சு) அவள் கைகளில் கைகளைக் கோர்க்கையில்
      பஞ்செனப் பறக்கிறேன், பாரங்கள் மறக்கிறேன்!
இன்றெனக்(கு) இருந்திடும் எண்ணங்கள் யாவையும்,
      ஈர்த்திட வந்தவள், சுவாசிக்க மறக்கிறேன்!

No comments:

Post a Comment