Thursday, October 9, 2014

சென்னை

வான்தொட்டும்  ஓயாது  உயர்ந்து  எழும் கட்டிடங்கள்
தேன்  சொட்டும்  இனியசுவை  விருந்தளிக்கும்  உணவகங்கள்
கடலலைகள்  தவழ்மடியாம்  மெரினாவின்  பரப்பளவில்
இடம்  பெயர்ந்து  இங்குவந்தோம்  இனியதோர்  வாழ்கை  தேடி!



ஈமொய்க்கும் மாம்பழமாய் இருக்குமிந்த ஊரினிலே
தீபெட்டிக் குடியிருப்பில் வாடகைக்கு இடம்பிடித்தோம்.
போர்க்களமாய் காட்சி தரும் பெருநகரச் சாலைகளை
புழுதிசூழ் பேருந்தில் ஊர்ந்துசென்று உடல் களைத்தோம்.

No comments:

Post a Comment