Monday, January 10, 2011

நொடி

நிலநடுக்கம் நெஞ்சினிலே நிலைகொண்ட அந்த நொடி
பதைபதைக்கும் புயலோடு மனம் சீற்றம் கொண்ட நொடி
இடி விழுந்து என் நெஞ்சை பொடிப் பொடியாய் செய்த நொடி
கொடியழகே எனை நீங்கி நீ சென்ற அந்த நொடி.

Tuesday, December 28, 2010

பெயர்

உன்
பெயர்
மட்டும்
போதுமடி
உயிரோடு
நான்
வாழ!

Friday, December 24, 2010

இது கம்ப்யூட்டர் காதற்க்காலம்

இது கம்ப்யூட்டர் காதற்க்காலம்
கனநேரம் வரையே நீளும்.
கண்ணோடு கண்கள் கண்டால்
காதலாய் கலந்து பேசி
நெட்டினில் கதை அடிப்பர்.
கட்டிலில் கதை முடிப்பர்.





சிந்தையை சிதைக்கும் காதல்

அன்றொருநாள் உன்னுடன் நான்
அனுபவித்த இன்பமெல்லாம்
கண்ணிரண்டில் கண்ணீராய்
கண்ணமெங்கும் பாயுதடி.

காதருகே கவின் மொழியாய்
நீ உரைத்த சொர்ற்க்கள் எல்லாம்
நெஞ்சகத்தின் சுவர்களிலே 
நித்தம் எதிரோலிக்குதடி.


நடுநிசியில் நரம்புகளின்
நடுவினிலே பிறக்குமொரு
நடுக்கத்தை நினைத்துருக 
புஜங்கள் பல வேண்டுமடி!


இன்னம் ஒரு நொடி கூட
உயிர் வாழத் தோன்றவில்லை.
இறந்தபின்னும் வலிதொடரும்
என்ற பயம் துரத்துதடி!

Thursday, November 18, 2010

என் காதலிக்கு கல்யாணம்

என் காதலிக்கு கல்யாணம், கண்ணாலன் நான் இல்லை.


நினைவுகளில் நீரலைகள், நித்திரையில் நெருப்பலைகள்.
கண்ணெதிரே பூக்கோலம், நெஞ்சருகே போர்க்காலம்.


என்
நெஞ்சகதுச் சோலையிலே பூத்தொளித்த மல்லிகைப்பூ,
பஞ்சகத்தை தேடியதும் பூஞ்சோலை வாடியது. 


உள்நெஞ்சம் கதறுதடி, உதிரமெல்லாம் கருகுதடி. 


உன் 
மணவறையில் அக்னிகுண்டம் அணையும் ஒரு தருணத்தில்,
பிணவறையில் என் உடம்பு கரியாகிக் கிடக்குமடி.




என் காதலிக்கு கல்யாணம்.




கண்ணாலன்.






நான் இல்லை.

Thursday, October 14, 2010

கலக்கம்

கடுகடுப்பாய் சில நொடிகள்,
காய்ந்து போகும் சில நொடிகள்,
கற்பனைகள் களவாடும், காட்சிகளில் சிலநொடிகள்,
கடிந்துகொண்ட சிலநொடிகள்,
வெடிந்துரைந்த சிலநொடிகள்,
வாழ்க்கையே வீணென, வெறித்து நின்ற சிலநொடிகள்,
வேதனைகள் ஒன்றுமில்லை. வீழ்சிகள் ஏதுமில்லை.
காரணம் தோன்றவில்லை. கண்களில் ஏன் சாரல் மழை!

Thursday, September 30, 2010

என்னைக் காணவில்லை

கண்களில் நீ
கருத்தினில் நீ
சிந்தையில் நீ
சிரிப்பினில் நீ
சொந்தமும் நீ
சொர்க்கமும் நீ

சொல்லடி பெண்ணே,
நான் இங்கு எங்கே?