Wednesday, February 8, 2012

நம் திருமணத்தில்

வங்கக் கடலும் அரபிக் கடலும்
வாழ்த்துரைக்க சங்கமிக்கும்.

ஜூஹு கடற்கரையில்
மெரினாவின் மணல் பரவும்.

முத்தமிழோடு மராட்டியும் சேரும்.

ஊத்தாப்பமும் உளுந்துவடையும்,
பாவ்-பாஜிக்கு  கை குலுக்கும்.

தாண்டியா ஆட்டங்களில்
பரதத்தின் அபிநயங்கள்.

 அன்பே நம் திருமணத்தில்,
திசை எட்டும் ஒன்றினையும்!

1 comment: