Friday, February 17, 2012

எங்கும் நீ

நதி நீரில் கை நனைக்க,
    நீர்த் துளியில் நீ இருந்தாய். நதி சேர்ந்த, 
கடல் நீரில் கால் நனைத்தேன்,
    கரை மணலில் நீ இருந்தாய். மணல் அருகே,
தென்னை மரத்(து) இளநீரின்,
    தண்மையென நீ இருந்தாய். மரத்தடியில்,
மலர்ந்திருந்த மல்லிகையின்,
    மென்மையென நீ இருந்தாய்!

No comments:

Post a Comment