Wednesday, March 21, 2012

என் தோழா, எழுந்து வா!

நல்லவராய் வாழ்தல் இழிவென்று  எண்ணும் 
நாகரீக இவ்வுலகில்,
வல்லவன் வகுக்கும் வக்கற்ற விதிகளெல்லாம்
வள்ளுவமாய் வாசலெங்கும்!

ஏனென்ற கேள்வி எவரிடமும் இங்கில்லை,
தானென்ற வாழ்க்கையிலே தலை மூழ்கிய தயாளர்கள்!

எலும்பிட்டால் வாலாட்டும் நாய்கட்கும் நம்மவர்க்கும்
ஏதிங்கே வித்யாசம், என் தோழா, எழுந்து வா!

No comments:

Post a Comment